Thursday, May 28, 2015

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, குருநாகல் மேல் நீதிமன்றத்தினால் சற்று முன்னர் பிணையில் விடுதலை !

Thursday, May 28, 2015
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, குருநாகல் மேல் நீதிமன்றத்தினால் சற்று முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

25ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீர பிணைகளிலுமே அவரை, குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி சுனந்த குமார ரத்னாயக்க விடுதலை செய்துள்ளார்.

சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எம்.பி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் அமைச்சருக்கு அப்பால் கைதுசெய்யப்பட்ட சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆர்.எம்.ஏ. பெர்ணான்டோ மற்றும் முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மொஹமட் சாகீர் ஆகியோருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment