Wednesday, May 27, 2015

நாட்டில் உடனடி ஆட்சிமாற்றம் தேவை : மன்னிப்புக்கோர மாட்டேன்: முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ!

Wednesday, May 27, 2015
நாட்டில் உட­ன­டி­யாக அர­சியல் மாற்றம் தேவை. அதற்­கான போராட்­டத்­திற்கு அணி திரள்வோம் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ அறை­கூவல் விடுத்தார்.
 
சீனாவின் துறை­முக நகரத் திட்­டத்தை எதிர்த்த அர­சாங்கம் இன்று அத்­திட்­டத்தை மீண்டும் ஆரம்­பிக்கப் போகின்­றது. இது தான் வேடிக்கை என்றும் முன்னாள் ஜனா­தி­பதி குறிப்பிட்டார். கொழும்பு நார­ஹேன்­பிட்டி அபே­ராம விகா­ரையில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற இரு வேறு மக்கள் சந்­திப்­புக்­களில் கலந்துகொண்டு உரை­யாற்றும் போதே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ இவ்­வாறு தெரி­வித்தார்.
 
இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,
 
இன்­றைய அர­சாங்கம் எமது ஆத­ர­வா­ளர்­க­ளையும் முன்னாள் அமைச்­சர்­க­ளையும் பழி­வாங்­கு­வது எப்­படி? சிறையில் அடைப்­பது எப்­படி? என்ற சிந்­த­னை­யோடு தான் 24 மணி­நே­ரமும் செயல்­ப­டு­கி­றது.
 
எனவே நாட்டின் அபி­வி­ருத்தி பொரு­ளா­தா­ரத்தில் கவனம் செலுத்­து­வ­தில்லை. அபி­வி­ருத்­திகள் பின்­ன­டைவைக் கண்­டுள்­ளன.பொரு­ளா­தாரம் வீழ்ச்சி கண்­டுள்­ளது. அன்று கண­வனும் மனை­வியும் ஒரே பஸ்ஸில் ரயிலில் பயணம் செய்ய முடி­யாத யுகம் காணப்­பட்­டது. பிள்­ளை­களை பாட­சா­லைக்கு அனுப்பி விட்டு அச்­சத்­துடன் வாழும் நிலை காணப்­பட்­டது.
 
புலி பயங்­க­ர­வாத யுகத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைத்தோம். பயங்­க­ர­வா­தத்தை ஒழித்தோம். தமிழ் மக்­க­ளுக்கோ அல்­லது வேறெந்த இனத்­துக்கு எதி­ராக நாம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வில்லை. பயங்­க­ர­வா­தத்­திற்கும் எதி­ரா­கவே செயற்­பட்டோம். நாட்டை மீட்­டெ­டுத்தோம்.
 
ஆனால் இன்று அனைத்தும் தலை­கீ­ழாக மாறி­விட்­டது. ஐரோப்­பிய நாடு­களின் நிபந்­த­னை­க­ளுக்கு நாம் அடி­ப­ணி­ய­வில்லை. இன்று ஐரோப்­பிய நாடு­களின் அடி­வ­ரு­டிகள் அதி­க­ரித்து விட்­டன. சீனாவின் துறை­முக நகரத் திட்­டத்தில் பாரிய ஊழல் மோச­டிகள் இடம்­பெற்­ற­தாக இந்த அரசின் அமைச்­ச­ரொ­ருவர் விமர்­சித்தார்.
 
ஆனால் இன்று அதே அமைச்சர் அப்­ப­டி­யொரு ஊழல் மோச­டி­களும் அத்­திட்­டத்தில் இடம்­பெ­ற­வில்லை. அதனை மீள ஆரம்­பிப்போம் என்­கிறார். இது தான் வேடிக்­கை­யாக இருக்­கின்­றது. பொலி­ஸாரால் சுயா­தீ­ன­மாக இயங்க முடி­ய­வில்லை. பிர­தமர் தலை­மை­யி­லான குழு­வி­னரே பொலி­ஸாரை இயக்­கு­கின்­றனர்.
 
இக்­கு­ழு­வினால் எமது ஆத­ர­வா­ளர்கள் முன்னாள் அமைச்­சர்கள் நண்­பர்கள் உற­வி­னர்கள் பிள்­ளைகள் கைது செய்யப்படுகின்றார்கள். சிறையில்
 
அடைக்கப்படுகின்றனர். இதனைத் தவிர இவ் அரசாங்கம் எதனையும் செய்யவில்லை.. எனவே நாட்டில் அரசியல் மாற்றம் தேவை. அதற்காக தயாராவோம் என்றார்

No comments:

Post a Comment