Thursday, May 7, 2015

நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவு மேற்குலக நாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்கின்றது : முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச!

Thursday, May 07, 2015
நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவு மேற்குலக நாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்கின்றது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

மேற்குலக நாடுகளின் கோரிக்கைக்கு அமையவே நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளை எதிர்த்த தரப்பினர் கைது செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் பாரியளவில் நிதி மோசடி செய்யப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை, கடனுக்கு சதொச நிறுவனத்தில் பொருட்களை வாங்கிய ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

100 நாட்களின் பின்னரும் ஆட்சியை நடத்தி அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு தைரியம் இருந்தால் பாராளுமன்றை கலைத்து பொதுத் தேர்தலை நடத்தட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment