Tuesday, April 7, 2015

ரணில் - மைத்­திரி கூட்­ட­ணியில் பங்­கெ­டுக்க நாம் விரும்­ப­வில்லை,பதவி கிடைத்தால் பலமான எதிர்க்கட்சியை உருவாக்குவேன்: தினேஷ் குண­வர்­த்தன!

Tuesday, April 07, 2015
தேசிய அர­சாங்கம் எனும் சூழ்ச்சிக் கூட்­ட­ணியில் எம்மை பங்­கு­தா­ர­ராக்க முயற்­சிக்­கின்­றனர். ஆனால் ரணில் - மைத்­திரி கூட்­ட­ணியில் பங்­கெ­டுக்க நாம் விரும்­ப­வில்லை. பாரா­ளு­மன்­றத்தில் தனித்தே செயற்­ப­டு­கின்றோம் என முன்னாள் அமைச்­சரும் மஹிந்­தவை ஆத­ரிக்கும் அமைப்பின் முக்­கி­யஸ்­த­ரு­மான தினேஷ் குண­வர்­த்தன தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்சி தலைவர் பதவி எனக்கு கிடைக்­கு­மாயின் பல­மான எதி­ர­ணி­யினை உரு­வாக்­குவேன் என்றும் குறிப்­பிட்டார்.பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்கட்­சித்­த­லைவர் யார் என்­பது இன்று பாரா­ளு­மன்ற கூட்­டத்­தொ­டரில் சபா­நா­ய­கரால் அறி­விக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் எதிர்க்­கட்சி தலைவர் தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

அனைத்து கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைத்து தேசிய அர­சாங்­கத்­தினை அமைப்­ப­தினால் நல்­லாட்­சி­யினை ஏற்­ப­டுத்தி விட முடி­யாது. ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் ஒரு அர­சாங்­கத்தில் இருப்­ப­தனால் இவர்கள் ஆட்­சி­யினை நல்­லாட்­சி­யென குறிப்­பி­ட­மு­டி­யாது.

எம்­மையும் தேசிய அரசின் கூட்­ட­மைப்பின் பங்­கு­தா­ர­ராக மாற்­றிக்­கொண்டு எதி­ரி­களை அடக்­கவே முயற்­சிக்­கின்­றனர். அமைச்சுப் பத­வி­க­ளுக்கு ஆசைப்­பட்டு நாட்டை சீர­ழிக்க ஒரு­போதும் நாம் துணை­போக மாட்டோம். எமது கூட்­டணி மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் கொண்டு வந்து நாட்டை பலப்­ப­டுத்­தவே முயற்­சிக்­கின்­றது. அதற்­க­மைய பாரா­ளு­மன்­றத்­திலும் பல­மாக செயற்­பட வேண்­டி­யுள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோரின் கூட்­ட­ணியில் சேர்ந்து பய­ணிப்­பதை விடவும் தனித்து பய­ணிப்­ப­தற்கே விரும்­பு­கின்றோம்.
அதே­போன்று பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்­சி­யாக நாம் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்றோம். இன்றும் பல­மான எதிர்க்­கட்­சி­யாக நாம் உரு­வா­கினால் எம்­முடன் இணங்கி செயற்­பட பலர் தயா­ராக இருக்­கின்­றனர். எனவே பாரா­ளு­மன்றக் கூட்­டத்தில் இன்று சபா­நா­யகர் தெரி­விக்கும் கருத்­திற்கு அமை­யவே அனைத்து தீர்­மா­னங்­களும் முன்­னெ­டுக்­கப்­படும்.

சபா­நா­ய­கரின் தீர்­மா­னங்­க­ளுக்­க­மைய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி பதவியினை எமக்கு வழங்கினால் அதனை சரியாக செய்து காட்டுவோம். அதேபோல் பாராளுமன் றத்தின் பலமான எதிர்க்கட்சியாக உருவாகி இன்று நடந்து கொண்டிருக்கும் அநீதிகளை தட்டிக் கேட்போம் எனவும் அவர் தெரிவித் தார்.

No comments:

Post a Comment