Tuesday, April 21, 2015

முன்னாள் ஜனாதிபதியை லஞ்ச ஊழல் விசாரணைக்கு அழைத்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Tuesday, April 21, 2015
முன்னாள் ஜனாதிபதியை லஞ்ச ஊழல் விசாரணைக்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானவர்கள் பத்தரமுல்ல சுற்று வட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதினால் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 
சபாநாயகர் தலைமையில் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவிருந்த கூட்டத்தினையும் நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக தெரியவருகிறது.
நாடாளுமன்ற அமர்வுகள் 15 நிமிடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
கட்சித் தலைவர்கள் சந்திப்பு நடத்தும் வகையில் இவ்வாறு நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இதனால் நாடாளுமன்றில் பதற்ற நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
நாடாளுமன்றம் 27ம் திகதி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தில் தொடர்ந்து நிலவிய பதற்ற நிலை காரணமாக எதிர்வரும் 27ம் திகதி வரை அவை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
 
பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment