Friday, March 27, 2015

பிரிவினைவாத அதிகாரங்களை நீக்கியதன் பின்னரே 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்: தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர!

Friday, March 27, 2015
புலிகளுக்கு  ஆதரவான பிரிவினைவாத அதிகாரங்கள் நீக்கப்பட்டதன் பின்னரே 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஐக்கியத்திற்கு 13ம் திருத்தச் சட்டம் பெரும் சவாலாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பிரிவினைவாத அதிகாரங்கள் அனைத்தும் முதலில் நீக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

குறிப்பாக காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள், மாகாணசபைகளை இணைக்கும் அதிகாரம், மத்திய அரசாங்கத்தின் அனுமதியின்றி நேரடியாக வெளிநாட்டு நிதி உதவிகளை மாகாண முதலமைச்சர் பெற்றுக் கொள்வதற்கான உரிமை போன்றனவற்றை ரத்து செய்ய வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அதிகாரங்களை ரத்து செய்யாது, 19ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment