Sunday, March 1, 2015

மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசமைப்பின் 19 வது திருத்தத்திற்கு ஆதரவளிக்கப்ப போவதில்லை: முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த!

Sunday, March 01, 2015
மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசமைப்பின் 19 வது திருத்தத்திற்கு ஆதரவளிக்கப்ப போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட அரசமைப்பு திருத்த யோசனை குறித்து ஸ்ரீலங்கா சுதச்திரக்கட்சியின் இணக்கமின்றி அவர்கள் இறுதி முடிவெடுத்தால் நாங்கள் அதனை ஆதரிக்கமாட்டோம்.

அரசாங்கம் எங்களது ஆதரவை பெற்று ரணில்விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்க முயல்கின்றது.

ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்குவதற்காக எங்களை பயன்படுத்துவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். எங்களது அபிப்பிராயத்தை கருத்திலெடுக்காமல் செயற்படுவதற்கு அரசாங்கம் முயன்றால் அதன் விளைவுகளை அவர்களே அனுபவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ராஜித சேனரத்தின,அரசமைப்பின் 19 திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மதத்தை பெற முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்திற்கு ஆரம்பத்தில் ஆதரவு வழங்கிய சுதந்திரக்கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஓழிப்பு மற்றும் தேர்தல் சட்ட சீர்திருத்தங்களை ஒன்றாக முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இதன் காரணமாக அரசமைப்பிற்கான 19 திருத்தம் குறித்து நெருக்கடி நிலை உருவாகி உள்ளதாகவும், இதற்கு தீர்வு காண்பதற்காக தற்போது இலண்டனினுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment