Friday, February 27, 2015

புலி பினாமிகளின் வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரதிகள் ஐ.நாவுக்கு அனுப்பி வைப்பு!

Friday, February 27, 2015
வடக்கு மாகாணசபையில் புலி பினாமிகளால் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானத்தின் பிரதிகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக புலி பினாமிகளின் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக புலி பினாமிகளின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மேலும் தெரிவிக்கையில்,
 
புலிகளின்  மீது நடத்தப்பட்டது இனப்படுகொலையே என்றும் இதற்கு சர்வதேச விசாரணையே அவசியமென்றும் புலிகளின் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அத் தீர்மானப் பிரதிகள் ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் ஆணையாளர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment