Wednesday, December 31, 2014

Minuwangoda Public Rally | මිනුවන්ගොඩ මහජන රැළිය | மினுவங்கொட மக்கள் பேரணி!


Wednesday, December 31, 2014
இலங்கை::President Mahinda Rajapaksa will address an election campaign rally in Veyangoda, Dec. 30, 2014. ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මැතිතුමා අද (30) මිනුවන්ගොඩ දී මහජන රැළියක් අමතනු ඇත. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அவர்கள் இன்று மினுவாங்கொடையில் தேர்தல் பிரச்சார பேரணியில்

றிசாத் பதியுத்தீன் மன்னார் நீதிமன்றத்திற்கு கல் எரிந்து மற்றும் நீதிபதிக்கும் ஏசிய அந்தப் செல்லப்பிள்ளை, அதுமட்டுமல்ல புத்தளத்தில் ஒரு மரணத்திலும் அவர் சம்பந்தப்பட்டவர். மன்னார் வணவள காட்டுப்பகுதிகளிலும் சம்பந்தப்பட்டவர். இவர் இந்தப் பக்கம் இருக்குமபோது இவர் பற்றி பாராளுமன்றத்தில் மேற்படி விடயங்களை எதிர்க்கட்சியினர், ரீ.என்.ஏ. பாரளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள். அரசு மீது மாசுபடுத்தினார்கள். இப்போது அவர் எங்கு இருக்கின்றார்.?
 
மேற்கண்டவாறு விமல் வீரவண்ச நேற்று இரவு பத்தரமுல்லை, மாலபே கடுவளையில் பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரவித்தார்.

விமல் வீரவன்ச அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
ஹக்கீம் – சம்பந்தன் இணைந்து வடகிழக்கை இணைத்து அதில் முஸ்லீம் அரபு வசந்த பிராந்தியத்தை பெற்றுக்கொள்வர்கள். டயஸ்போரா மற்றும் வெளிநாட்டு தூதுவர்களது நிகழ்ச்சி நிரலுக்கு ஹக்கீம் சம்பந்தன் இயங்குவார்கள். இவர்கள் மஹிந்த ராஜபக்சவுடன்இருந்து குழிபறிப்பார்கள் என்று கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே இந்த நாட்டுக்கும் சொல்லியிருந்தேன்.
 
அதேபோன்று மைத்திரிபால சிறிசேனா தனது தனிப்பட்ட செயலாளரை பொலன்னருவையில் வைத்து திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் உள்ளதாகவும் விமல் தெரிவித்தார்.
 
மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13வது சரத்து, வடக்கில் உள்ள இராணுவம், தேசிய பாதுகாப்பு மற்றும் இந்த நாட்டின் பிரிவினைவாதம், வட கிழக்கு மீள ஒன்றிணைப்பது பற்றி பொலிஸ், காணி அதிகாரம் பற்றி என்ன சொல்லியிருக்கின்றார். இதனை இவர் உடன் இந்த நாட்டுக்கு வெளிப்படுத்தல் வேண்டும். இதற்கு மைத்திரி அந்தரங்க ஒப்பந்தம் கைச்சாத்திட்டாரா?
 
இந்த கூட்டமைப்பில் உள்ள சிகல உருமைய சம்பிக்க ரணவக்கவும், ரத்துலெயத் தேரோவும் இந்த நாட்டு பௌத்த மக்களுக்கு என்ன பதில் கூறப் போகின்றார்கள்.
 
ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒருபோதும் இந்த நாட்டில் ஹக்கீமுக்கு ஒரு பிராந்தியம், சம்பந்தனுக்கு ஒரு பிராந்தியம் என இந்த நாட்டை காட்டிக் கொடுக்கவில்லை. அவர் தோல்விபெற்றாலும் சரி அவர் ஒரு போதும் இந்த நாட்டை பிரிவிணைக்கு துணைபோகமாட்டார்.
 
இதே போன்று தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யுத்தத்தினை செய்யும்போது உலகில் உள்ள எத்தணை நாடுகள் யுத்தத்தினை நிறுத்தும்படியும், அழுத்தம் கொடுத்தனர். எத்தனை நாட்டு பிரதம மந்திரிகள் இந்த நாட்டுக்குள் வந்து அழுத்தம் கொடுத்தனர். இவர்களை கணக்கில் எடுக்காது யுதத்தினை வெற்றி பெற்றார். அதே போன்று 9ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே மீள ஜனாதிபதியாக வெற்றிபெறுவது பெரும்பாண்மை பௌத்த மக்கள் தீர்மானித்து விட்டனர்.
 
மைத்திரி சிறிசேனவின் குடும்பத்தில் 12 சகோதரர்கள் உள்ளனர். பொலன்னருவையில் உள்ள மஹா ஹோட்டல், இன்னொரு சகோதரர் நுவரேலியாவில் ஒரு ஹோட்டல், பொலன்னருவையில் உள்ள சகல அரிசி ஆலைகள், நெல்வயல்கள், மிண்நேரியா வாவியில் உள்ள சகல மண் பேமிட் அனைத்தையும் உருமையாக்கியுள்ளனர்.
 
செங்கல் உற்பத்தி, சிறிசேனா இறுதியாக நடைபெற்ற கபினட்டில் கூட ஒரு சகோதருக்கு ஹோமகவில் 10 ஏக்கரை கொள்வனவு செய்ய பத்திரிகை சமர்ப்பித்தனர். அதனை அமைச்சர் வாசுதேவா நானயக்கார தடுத்து நிறுத்தினார்.
 
கொள்ளுப்பிட்டி பம்பலப்பிட்டியில் உள்ள கெசினோ கிளப்பில் ஏறி சூதாடுபவர்தான் டட்லி சிறிசேன. இதுதான் சிறிசேனாவின் குடும்ப பாலாணய” என விமல் வீரவண்ச தெரிவித்தார்.

No comments:

Post a Comment