Wednesday, December 31, 2014

நடவடிக்கைகளின் போது உயிர் தியாகம் செய்த யுத்த வீரர்களின் குடும்பத்தினருக்கு வீட்டு உதவிகள்!

 Wednesday, December 31, 2014
இலங்கை::பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. அயோமா ராஜபக்ஷ அவர்களால் யுத்த வீரர்களின் குடும்பத்தினருக்கு வீட்டு நிரமானத்திற்கான நிதியுதவிகள் இன்று (டி. 30) இடம் பெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் இவர் பிரதம அதிதியாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 1995 ஆம் ஆண்டு யுத்த நடவடிக்கைகளின் போது உயிர் தியாகம் செய்த இலங்கை கடற்படையைச் சேர்ந்த லெப்டினன் கொமாண்டர் நலின் வஜேசிங்கவின் மகளான செல்வி வெனுரி என்பவரால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வுக்கு வருகை தந்த திருமதி.அயோமா ராஜபக்ஷ அவர்கள் காலம் சென்ற லெப்டினன் கொமாண்டர் விஜேசிங்கவின் மனைவி திருமதி ருக்ஸானி டி சில்வா மற்றும் வெனுரி ஆகியோரினாரல் வரவேற்கப்பட்டார்.
இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா ரெலிகொமின் தலைவர் திரு. லலித் டி சில்வா, பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரரகளின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment