Wednesday, December 31, 2014

புலிகளுக்கு சொந்தமான கனடா - டொரன்டோ கடைகளில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் படங்கள்!

Wednesday, December 31, 2014
டொரன்டோ::புலிகளுக்கு சொந்தமான டொரன்டோ கடைகளில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கனடாவிற்கான இலங்கையின் முன்னாள் கொன்சோல் அதிகாரி பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்த பின்னர் இவ்வாறு பாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்ட கடைகளில் இவ்வாறு மைத்திரிபாலவின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

புலிகளின் வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வரும் பல இடங்களிலும் இவ்வாறு மைத்திரிபாலவிற்கு ஆதரவளிப்பதற்கு மகிழ்ச்சி வெளியிடப்பட்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

லண்டனிலும் இவ்வாறு படங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவை பயன்படுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸசவை தோறகடிக்க முயற்சிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்
.

No comments:

Post a Comment