Wednesday, November 26, 2014

பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாடியவருக்கு காவல்துறை அடி உதை!

Wednesday, November 26, 2014
சென்னை::மந்தைவெளி அருகில் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடியவரை காவல் துறையினர்  கைது செய்துள்ளனர். காவல்துறையினர் கடுமையாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
 
புலிகளின் தலைவர் பிரபாகரனின் 60-வது பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் தமிழ் உணர்வாளர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மந்தவெளி அருகில் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனரை எடுக்க காவல்துறையினர் முயற்சி செய்துள்ளனர்  அப்பொழுது அதை எடுக்க வேண்டாம் என்று திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த குட்டி  உமாபதி என்பவர் தடுத்துள்ளார்.
 
அப்பொழுது விதிமுறையின் கீழ் பேனர் வைக்க கூடாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது, அதற்கு உமாபதி அருகில் இருந்த டாஸ்மார்க் கடை 24 மணி நேரமும் இயங்குகிறது இதை என்றாவது நீங்கள் தடுத்து நிறுத்தியது உண்டா என்று கேள்வி கேட்டிருக்கிறார்.
 
இதனால் ஆத்திரமடைந்த காவல்துறையினர் குட்டி உமாபதியை கைது செய்து அபிராமிபுரம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர், சுற்றியிருந்த புலிகளின் ஆதரவாளர்களால்  சாலை மறியலில் ஈடுபட்டிருந்த நேரத்தில் காவல்துறையினர் குட்டி உமாபதியை காவல் நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர். காவல்துறை கடுமையாக தாக்கியதில் குட்டி உமாபதியின் கை கால்கள் உடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
தற்போது, குட்டி உமாபதி மருத்துவ சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மருத்துவமனைக்கு வெளியே நூற்றுக்கணக்கான புலிகளின் ஆதரவாளர்களால் தமிழக காவல் துறை  கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் ஐநூறுக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி வருகின்றனர். இதனால் சென்னை அண்ணாசாலை வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment