Thursday, November 27, 2014

தமிழக மீனவர்களுக்கு மன்னிப்பு அளித்தமைக்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

Thursday, November 27, 2014
மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு மன்னிப்பு அளித்தமைக்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை ஜனாதிபதிக்கு நன்றிதெரிவித்துள்ளார்.
 
நேபாளத்தில் நடைபெறும் சார்க் உச்சிமாநாட்டின்போது இலங்கை ஜனாதிபதியை சந்தித்தவேளையே மோடி நன்றி தெரிவித்ததாக இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் அக்பர்டீன் டுவிட்டர்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்திய மீனவர்கனை மன்னித்து விடுதலைசெய்து திருப்பியனுப்பியதற்காக மோடி நன்றிதெரிவித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மனித உரிமைகள் என்பது ஒரு ஒழுக்கம் சார்ந்த விஷயம். ஆனால் அது சிலரால் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என இலங்கை ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

18-வது சார்க் உச்சி மாநாடு நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்று வருகிறது.

மாநாட்டின் துவக்க விழாவில் உரையாற்றிய ராஜபக்ச, "மனித உரிமைகள் என்பது ஒரு ஒழுக்கம் சார்ந்த விஷயம். ஆனால் அது சிலரால் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.

பிற நாடுகளின் உள்விவகாரத்தில், சுதந்திரத்தில் தலையிட மனித உரிமை அத்துமீறல் குற்றச்சாட்டு ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.

பயங்கரவாதம் பிராந்தியங்களுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது" என்றார்.
 
வெளியுலக அச்சுறுத்தல்களுக்கு எதிராக சார்க் நாடுகள் அனைத்தும் கைகோர்த்து செயற்படுவது அவசியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அரசியல் சார்ந்த இருதரப்பு பிரச்சினைகளில் தலையிடாமை சார்க் நாடுகளின் கொள்கையாக இருந்தாலும், மேற்குலக வெளி அச்சுறுத்தல்களில் இருந்து தவிர்த்துக்கொள்வதற்கு நாம் அனைவரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வெளிப்புற சூழ்ச்சிகளை நாம் எதிர்க்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றைய தினம் நேபாளம் காத்மண்டுவில் நடைபெற்ற சார்க் உச்சிமாநாட்டில் சிறப்புரையாற்று கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
 
ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
 
சமாதானம் சுபீட்சத்திற்கான பலமான ஒருமைப்பாடு என்ற தொனிப்பொருளில் இடம்பெற்று வரும் இம்மாநாட்டில் சார்க் அமைப்பைச் சேர்ந்த 8 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். தெற்காசிய ஒத்துழைப்பு (சார்க்) அமைப்பில் இதுவரை மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யமீன் அப்துல் கையூம் தலைமைப் பதவியை வகித்ததுடன், இம்முறை நேபாள பிரதமர் சுசில் கொய்ராலவுக்கு உத்தியோகபூர்வமாக அப்பதவி வழங்கப்பட்டது.
 
சார்க் பிராந்திய நாடுகள் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு அரச தலைவர்களின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் பயங் கரவாதத்தினால் எதிர்நோக்க வேண்டியுள்ள அச்சுறுத்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது. அத்தகைய அச்சுறுத்தலை வெற்றிகரமாக முகம்கொடுப்பதற்கும் அதிலிருந்து தமது நாடுகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் மிகுந்த ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி அரச தலைவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள்.
 
அங்கத்துவ நாடுகளுக்கு மேற்குலக நாடுகளில் இருந்து எதிர்கொள்ள நேரும் அச்சுறுத்தல்களின் போது ஒன்றிணைந்து அதற்கு முகம் கொடுப்பதற்கு சார்க் அமைப்புகள் முன்வர வேண்டுமென்று அமைப்பின் தலைவர் இங்கு கருத்து தெரிவித்தார். பயங்கரவாதம் நாட்டின் எல்லைக்களைக் கடந்து
 
சர்வதேசமெங்கும் பரவியுள் ளதாகவும் சார்க் பிராந்திய நாடுகள் அந்த அச்சுறுத்தலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் அதற்கு வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்கும் பயங்கவாதத்தை முழுமையாக ஒழிப்பதற்கும் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியம் என்றும் இம்மாநாட்டின் போது பூட்டான் பிரதமர் கேட்டுக் கொண்டார். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங் களையும் தடுப்பதும் கட்டுப்படுத் துவதும் ஒழிப்பதும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமது நாட்டு மண்ணை வேறு நாடுகள் எமது நாட்டுக்கு எதிராக பயன்படுத் துவதற்கு இடமளிக்க கூடாது என்று ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மொஹமட் அஷ்ரப்கான் இங்கு குறிப்பிட்டார். பயங்கரவாதம் மற்றும் சர்வதேச குற்றங்களுக்கு எதிராக சார்க் பிராந்திய நாடுகள் அர்ப்பணிப்புடன் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியம் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாடுகளின் தலைவர்களை கேட்டுக் கொண்டார்.
 
அவுஸ்திரேலியா, சீனா, ஈரான், ஜப்பான், கொரியா, மியன்மார், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுடனான தூதுக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி ஷெனுகா செனவிரத்ன, நேபாளத்திற்கான இலங்கைத் தூதுவர் டபிள்யூ.எம். செனவிரத்ன ஆகியோரும் இடம் பெறுகின்றனர்.
 
சார்க் பிராந்திய நாடுகளின் தலைவர்களான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஜீ மொகமட் அஷ்ரப் கனி, பங்கள தேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பூட்டான் பிரதமர் லைன் செங் ஷெரிங் தொப்கே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யமீன் அப்துல் கையூம், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment