Sunday, November 30, 2014

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானால் எவ்வாறு ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பார் : ஜாதிக ஹெல உறுமய!

Sunday, November 30, 2014
இலங்கை::மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானால் எவ்வாறு ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பார் என்று ஜாதிக ஹெல உறுமய கேள்வி எழுப்பியுள்ளது.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கும் போது இது சாத்தியமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
 
அவிசாவளையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஹெல உறுமயவின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மைத்திரிபாலவின் வெற்றியில் நிச்சயமாக பங்கேற்பர் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு விடயத்தில் ஜாதிக ஹெல உறுமயவினால் பொதுக்கொள்கையை ஏற்படுத்த முடிந்திருக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment