Wednesday, November 12, 2014
இலங்கை::சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் வகையில், பாசிக்குடாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாசப் பிரயாணிகளின் நன்மை கருதி முதன் முதலாக ஹட்டன் நெசனல் வங்கியின் தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரம் (ATM) பாசி வே ஹோட்டலில் திங்கட்கிழமை (10) திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை::சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் வகையில், பாசிக்குடாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாசப் பிரயாணிகளின் நன்மை கருதி முதன் முதலாக ஹட்டன் நெசனல் வங்கியின் தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரம் (ATM) பாசி வே ஹோட்டலில் திங்கட்கிழமை (10) திறந்து வைக்கப்பட்டது.
பாசி வே ஹோட்டல் முகாமைத்துவப் பணிப்பாளர் ஈ.வி.குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஹட்டன் நெசனல் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் ரிமல் பெரேரா தன்னியக்க இயந்நிரத்தை திறந்துவைத்து உரையாற்றுகையில் இலங்கையில் உல்லாசப் பிரையாணத்துறையை மேம்படுத்தும் நோக்கோடு பாசிக்குடாவிற்கு வரும் வெளிநாட்டு உல்லாசப்பிரயாணிகளின் வசதி கருதியே இச் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு காலமும் வங்கித் தேவைகளுக்கு 6 கி.மீற்றருக்கு அப்பால் உள்ள வாழைச்சேனை நகரத்திற்குச் சென்று உல்லாசப் பிரயாணிகள் உட்பட வாடிக்கையாளர்கள் வங்கிக் கருமங்களில் ஈடுபட்டனர். இந்தப் புதிய தொழில் நுட்பங்கள் உள்ள ரெலர் மெசினில் உலகளாவிய ரீதியில் உள்ள வீசா அட்டைகளை செயற்படுத்த முடியும் எனக் கூறினார்.
உதவிப் பொது முகாமையாளர் ( வலையமைப்பு முகாமைத்துவம்) றோகான் தம்பிராஜா, கிழக்குப் பிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் ஜெகராஜா, வாழைச்சேனை வங்கி முகாமையாளர் ரெஜினோல் பீற்றர் உட்பட வங்கியின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்வளவு காலமும் வங்கித் தேவைகளுக்கு 6 கி.மீற்றருக்கு அப்பால் உள்ள வாழைச்சேனை நகரத்திற்குச் சென்று உல்லாசப் பிரயாணிகள் உட்பட வாடிக்கையாளர்கள் வங்கிக் கருமங்களில் ஈடுபட்டனர். இந்தப் புதிய தொழில் நுட்பங்கள் உள்ள ரெலர் மெசினில் உலகளாவிய ரீதியில் உள்ள வீசா அட்டைகளை செயற்படுத்த முடியும் எனக் கூறினார்.
உதவிப் பொது முகாமையாளர் ( வலையமைப்பு முகாமைத்துவம்) றோகான் தம்பிராஜா, கிழக்குப் பிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் ஜெகராஜா, வாழைச்சேனை வங்கி முகாமையாளர் ரெஜினோல் பீற்றர் உட்பட வங்கியின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment