Thursday, November 27, 2014

தமிழக மீனவர்களின் 76 படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் சுப்பிரமணியசாமி ஆலோசனை!

Thursday, November 27, 2014
இலங்கை::
இலங்கை கடற்படையினரால் வெவ்வேறு காலகட்டங்களில் சிறைப் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 76 படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் ஆலோசனை நடத்தியதாக பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில், "கோட்டாபய ராஜபக்ஷவை நேரில் சந்தித்தேன். அவரிடம் தமிழக மீனவர்களின் 76 படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மீனவர்கள் படகுகளை விடுவிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment