Friday, October 31, 2014

இலங்கையிடமிருந்து வேண்டுகோள் கிடைத்துள்ளதை தொடர்ந்து உடனடி உதவிகளை வழங்க தயார்: அமெரிக்கா!

Friday, October 31, 2014
இலங்கை::இலங்கையிடமிருந்து வேண்டுகோள் கிடைத்துள்ளதை தொடர்ந்து அந்த நாட்டிற்க்கு உடனடி உதவிகளை வழங்க தயாராவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மண்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உதவுமாறு இலங்கை அரசாங்கம்  அழைப்பை விடுத்துள்ளாதாக அமெரிக்க வெளிவிவகார பேச்சாளர்-ஜென் சகி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சு யுஎஸ்எயிட் ஊடாக உதவிகளை வழங்குவதற்க்கு தயாராவாதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்க்கும் மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அமெரிக்க தூதரகம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டுள்ளது.

இலங்கை அரசாங்கமும் பாதிக்கப்பட்டவர்களும், தங்களுடைய குடும்பத்தவர்களுக்கா துயருறும், காயப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும். இவ்வேளையில் அமெரிக்கா அவர்களுக்கு உதவ தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தையும், அதன் இராணுவத்தையும், மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தூதரகம் பாராட்டியுள்ளது.
 

No comments:

Post a Comment