Monday, October 20, 2014

அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா ஜாமினில் விடுதலையானதில் வருத்தம் இல்லை: கருணாநிதி!

Monday, October 20, 2014
சென்னை::இதுதொடர்பான, அவரது அறிக்கை:சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு வெளியானவுடன், நான் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

காரணம், இது முக்கியமான வழக்கு என்பதால், எச்சரிக்கை உணர்வுடன் பொறுமையாக இருந்து, தீர்ப்பு முழுவதையும், கவனமாக படித்த பின் விளக்கம் அளிக்கலாம் என, எண்ணினேன்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது என்பதற்காக, நான் மகிழ்ச்சி அடையவும் இல்லை; அவர், ஜாமினில் விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்பதற்காக வருத்தப்படவும் தயாராக இல்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
 
மேலும், ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது என்பதற்காக, நான் மகிழ்ச்சி அடையவும் இல்லை; தற்போது அவர் உச்ச நீதிமன்றத்தால், நிபந்தனை ஜாமினில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்பதற்காக வருத்தப்படவும் தயாராக இல்லை.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment