Friday, October 24, 2014

மொன்டரயல் மற்றும் ஒட்டாவா ஆகிய இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் 1980களில் இலங்கை எதிர்நோக்கிய நிலைமையை கனடா தற்போது எதிர்நோக்கி வருகின்றது: கோதபாய ராஜபக்ஸ!

Friday, October 24, 2014
இலங்கை::
1980களில் இலங்கை எதிர்நோக்கிய நிலைமைகளை கனடா தற்போது எதிர்நோக்கி வருவதாக பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.கனடாவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொன்டரயல் மற்றும் ஒட்டாவா ஆகிய இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் இரண்டு படைவீரர்களும் இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1983ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் பயங்கரவாத செயற்பாடுகளை ஆரம்பித்ததற்கு நிகரான வகையில் இந்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், சர்வதேச சமூகத்தின் ஒரு தரப்பினர் இலங்கையின் பயங்கரவாத அச்சுறுத்தல்களை உதாசீனம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment