Wednesday, September 3, 2014

UN விசாரணைக்கு எதிராக தீக்குளித்த முன்னாள் இராணுவச் சிப்பாய் மரணம்!

Wednesday, September 03, 2014
கொழும்பு கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக தீக்குளித்தவர், நேற்றிரவு 10 மணியளவில் மரணமானார். படுகாயமுற்ற நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையிலேயே அவர் மரணமானார்.
 
75 வயதான முன்னாள் இராணுவ வீரரான அவர், ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டார் என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே தமக்கு தாமே தீமூட்டிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
 
தீமூட்டிக் கொண்ட அவர் உடலின் பெரும்பாலான பாகங்கள் எரியுண்ட நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தீமூட்டிக் கொண்டதும் அவர் பொலிஸாருக்கு வெளிட்ட தகவலில் தாம் கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாகவே தீமூட்டிக் கொள்ள ஆயத்தமானதாகவும்,
 
பொலிஸார் அங்கிருந்து செல்லுமாறு தம்மை விரட்டியமையால் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் தீமூட்டிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment