Tuesday, September 30, 2014

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஐ.நா. பொதுச் சபை உரை நாட்டின் நற்பெயரை நிலைநிறுத்த உலக அரங்கில் கிடைத்த சந்தர்ப்பம்!

Tuesday, September 30, 2014
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஐ.நா. பொதுச் சபை உரையும், உலகத் தலைவர்களுடனான அவரது சந்திப்பும் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளன.
 
ஒரு சில ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு இலங்கை மீது பல் வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும். சர்வதேசம் இன்று உண்மை நிலையையும் யதார்த்தத்தையும் புரிந்திருக் கிறது.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் அபிவி ருத்திப் புறக்கணிப்புக்கள் இடம்பெறுவதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா போன்ற நாடுகள் அவதூறு பரப்பி வரும் நிலையில், ஐ.நா. தலைமையகத்தில் உலகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருப்பது இலங்கை தொடர்பான சர்வதேச அரசியலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறது.
 
ஐ.நா. பொதுச் சபையின் 69 வது கூட்டத் தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், ஐ.நா. மனித உரி மைகள் பேரவை ஓரவஞ்சனையோடு செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டினார். இலங்கையை இலக்கு வைத்துச் செயற் படும் சில நாடுகளின் கைப்பொம்மையாக மனித உரிமைகள் பேரவை செயற்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் ஜனா திபதி தனது உரையின் போது மிகவும் ஆணித்தரமாகக் கூறி னார்.
 
ஐ.நா. பொதுச் சபையில் உலகத் தலைவர்களின் உரைகளை சர்வதேசம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய உரை முழு உலகையும் ஈர்த்ததாகவே கூறப்படுகிறது.
உலக மேடையில் துணிகரமாக உரையாற்றிய யதார்த்தவாதி என்ற பெருமைக்குரியவராக ஜனாதிபதி மதிக்கப்படுகிறார். உண் மையில் இலங்கையில் எதைக் கூறினாரோ அதையே சர்வ தேசத்துக்கும் எடுத்துக் கூறியவர் ஜனாதிபதி.
 
சிலர் உள்ளூரில் ஒரு கதையும் வெளிநாடுகளில் இன்னொரு கதையும் பேசுகிறார்கள். அதேபோல, இன்னும் சில அரசியல் வாதிகள் சிங்களப் பத்திரிகைகளுக்கு ஒரு பேச்சும் தமிழ், ஆங்கில பத்திரிகைகளுக்கு வேறுவிதமாகவும் பேசி தங்களது அரசியல் இருப்பை தக்க வைக்க முனையும் யுகம் இது.
 
இந்த நிலையில், வார்த்தை மாறாது கொள்கைகளை முன்னெடுத்து யதார்த்தத்துடன் இலக்கை நோக்கிச் செல்லும் பெருந் தலை வராக உலகம் ஜனாதிபதியை இன்று அடையாளங் கண்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், ஐ.நா. பொதுச் செய லாளர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் பான்கீ மூன் தெரிவித்துள்ள கருத்து, ஜனாதிபதி யின் ஆளுமைக்கும் திறமைக்கும் கிடைத்திருக்கின்ற மிகப் பெரிய அங்கீகாரமாகவே கருதக் கூடியதாக இருக்கிறது.
“இலங்கையின் எஞ்சிய சவால்களையும் மஹிந்தவின் ஆளுமை தோற்கடிக்கும்” என பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
 
யுத்தம் முடிவடைந்த குறுகிய காலத்தில் இலங்கை, குறிப்பாக வட க்கு, கிழக்கு மாகாணங்கள் அடைந்திருக்கின்ற அபிவிருத்தி உலக நாடுகளுக்கு மிகப் பெரிய முன்மாதிரியாக அமைந் திருக்கிறது. யுத்தத்தில் நேரடியாக ஈடுபட்ட எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பி னர்கள் சுமார் 12,000 பேருக்கு புனர் வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
 
அதே நேரம், தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த மக்கள் நிரந்தர வீடுகளில் சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்பட்டு ள்ளார்கள். யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் விதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் முற்றாகப் பூர்த்தியடையும் நிலையில் இருக்கின்றன.
இதைவிடவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசாங்கம் பொறுப் பேற்றுள்ள பாடசாலைகளின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளால், பாதிக்கப்பட்ட மாணவச் சிறார்கள் கல்வியைத் தொடர வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், துப் பாக்கியையும் கழுத்தில் சயனைட்டையும் கொண்டு திரிந்த சிறுவர்கள் இன்று பேனாவும் புத்தகங்களும் ஏந்தி நிற்கி றார்கள். இதற்கு இந்த அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடு கள்தான் காரணமாக அமைந்துள்ளதென்பதை எவரும் மறுக்க முடியாது.
 
இலவசக் கல்வியின் பலனை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்க ளும் இப்போது முழுமையாக அனுபவிக்கிறார்கள். தேசிய மட்டப் பரீட்சைகளில் என்றுமில்லாதவாறு வடமாகாண த்திலி ருந்து சிறந்த பெறுபேறுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 
இந்த நிலைமையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பான் கீ மூனுக்கு மட்டுமல்ல, தன்னைச் சந்தித்த உலகத் தலைவர்களுக்கும் எடுத்துக் கூறியிருக்கிறார்.
எனவே, இலங்கை பற்றிய தப்பபிப்பிராயத்தைக் களைய உலக மேடை நல்லதொரு களமாக அமைந்திருந்ததாகவே சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment