Monday, September 29, 2014

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் மதிப்பீடு செய்ய உள்ளது!

Monday, September 29, 2014
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் மதிப்பீடு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிவில் மற்றும் அரசியல் சட்டங்களை சர்வதேச பிரகடனம் அமுல்படுத்தப்படுவதனை கண்காணிக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மனித உரிமை குழு, இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராய உள்ளது.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 7ம் திகதி முதல் 31ம் திகதி வரையில் ஜெனீவாவில் இந்தக் குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 7ம் திகதி இலங்கை குறித்து மீளாய்வு செய்ய உள்ளது.

புருண்டீ, ஹெய்ட்டி, மொல்டா, மொன்டன்கரோ இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தொடர்பிலும் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மனித உரிமை குழுவில் இலங்கை உள்ளிட்ட 168 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இந்த நாடுகள் மனித உரிமை நிலைமைகள் குறி;த்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகின்றது.

இந்த அறிக்கையை 18 சுயாதீன நிபுணர்கள் ஆய்வு செய்வார்கள்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தேசிய மனித உரிமை ஆணைக்குழுக்கள் போன்றவற்றின் கருத்துக்களையும் குழு கவனத்திற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment