Friday, August 29, 2014

பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு!

 Friday, August 29, 2014
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஸல் தாஹிர் ராபிக் பட் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை நேற்று (ஆக.28) அமைச்சில் வைத்து சந்தித்தார்.
இரு தரப்பு விடயங்கள் தொடர்பாக இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதுடன், சந்திப்பை நினைவு கூரும் முகமாக நினைவுச் சின்னங்களையும் பரிமாரிக் கொண்டனர்.
இச் சந்திபின் போது இலங்கை விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக்க, எயார் கொமடே ஹாமிட் ராசிட் ரன்தேவ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கும், பாகிஸ்தான் விமானப் படைத் தளபதி எயர் ஷீப் மார்ஸல் தாஹிர் ராபீக் பட்டிற்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இரு தரப்பு உறவுகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு கூட்டுறவு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக்கவுடனும், பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

No comments:

Post a Comment