Friday, August 29, 2014

வெளிநாட்டு புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைக்கும் நோக்கில் இரண்டு புதிய முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன!

Friday, August 29, 2014
வெளிநாட்டு புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைக்கும் நோக்கில் இரண்டு புதிய முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தினால் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் புகலிடம் கோரும் வெளிநாட்டுப் பிரஜைகளை தடுத்து வைக்கும் நோக்கிலேயே இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு மற்றும் பூசா ஆகிய  இடங்களில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வீசா சட்டங்களை மீறி நீண்ட காலம் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகளை தடுத்து வைக்க மிரிஹானவில் ஓர் முகாம் காணப்படுகின்றது.

இந்த முகாமில் பெரும் எண்ணிக்கையிலான புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகளவில் இவ்வாறு புகலிடம் கோரி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தில் பதிவு செய்துகொண்ட 1500 வெளிநாட்டுப் பிரஜைகள் தடுப்பு முகாம்களில் தங்கியிருக்கின்றனர்.

No comments:

Post a Comment