Thursday, August 28, 2014

தமிழக மீனவர் பிரச்னை இந்திய, இலங்கை கூட்டுக்குழு: டெல்லியில் நாளை பேச்சுவார்த்தை!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

Thursday, August 28, 2014
சென்னை::இலங்கை கடற்படையால் அடிக்கடி தமிழக மீனவர்கள் தாக்கப்படும்  பிரச்னை தொடர்பாக டெல்லியில் நாளை உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சர்வதேச கடல் எல்லை பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதில் தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் நீடித்து வருகிறது. எனவே, சர்வதேச கடல் எல்லை பகுதியில் மீன்பிடிப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே இணக்கமான சூழலை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை காண இந்தியா-இலங்கை அதிகாரிகள் இடம்பெற்றுள்ள உயர்மட்ட கூட்டு குழு அமைக்கப்பட்டது  இக்குழுவில் இந்திய வெளியுறவு துறையை சேர்ந்த 2 உயர் அதிகாரிகளும், 2 வல்லுனர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு பேச்சுவார்த்தை நாளை டெல்லியில் நடக்க உள்ளது.

இந்த கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் விவாதிக்கப்பட வேண்டிய பொருள்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்த திங்கட்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதன்படி, நாளை டெல்லியில் நாளை நடைபெறும் கூட்டுக்குழு கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து மீன்வளத்துறை செயலாளர் விஜயகுமார், மீன்வளத்துறை ஆணையர் பீலா ராஜேஷ் கலந்து கொள்கிறார்கள். இலங்கை அரசின் மீன்வளத்துறையில் இருந்து ஒரு அதிகாரியும், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்குழுவின் பிரதிநிதி ஒருவரும் கலந்துகொள்ள உள்ளார்.இந்த கூட்டத்தில் தமிழக மீனவர் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைத்தால் வேலைநிறுத்த போராட்டத்தை விலக்கிக்கொள்வது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் நாளை மாலை மீனவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment