Sunday, August 31, 2014

அரைத்த மாவையே இப்போதும் அரைத்துக் தமிழ் மக்களின் தலையில் நன்றாகவே மிளகாய் அரைத்துவருகின்ற தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்புக் காரர்கள்!

Sunday, August 31, 2014
இலங்கை::சம்பந்தன் தலைமையிலான (புலி)கூட்டமைப்பின் உயர்மட்ட குழுவினர் முதல்முதலாக இந்தியாவின் பிரதமர் உள்ளடக்கிய குழுவினரை சந்தித்து திரும்பியிருக்கின்றனர். இந்தியாவில் பாரதிய ஜனதா தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து சம்பந்தன் இவ்வாறானதொரு சந்திப்பிற்கான வேண்டுகோளை விடுத்திருந்தார்.
 
இதற்கான ஒழுங்குகளை கொழும்பிலுள்ள இந்திய தூதுவர் மேற்கொண்டிருந்தார். ஆனால் இந்த சந்திப்பின் பின்னர் அதிசயங்கள் நடைபெறப்போவதாக சொல்லி வந்த தமிழ் ஆய்வாளர்கள், ஊடகக்காரர்கள் என்போரின் கதைதான் அதோகதியாகிவிட்டது. பெரும் ஆவலுடன் ஒரு திரைப்படத்திற்காக ஏங்கிக்கொண்டிருந்த ரசிகர் ஒருவர் படத்தை பார்த்தபின் இவ்வளவுதானா என்று அலுத்துக் கொள்ளுவதற்கு ஒப்பானதுதான், இந்த ஆய்வாளர்கள், ஊடகக்காரர்களின் நிலைமையும்.
 
ஆனால் ஓரளவு உண்மைகளை பேச வேண்டுமென்பதில் நாட்டம் கொண்டிருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில அரசியல் பத்தி எழுத்தாளர்கள் கொஞ்சமாக பேசியுமிருக்கின்றனர். ஆனால் மற்றவர்களோ முன்னர் அரைத்த மாவையே இப்போதும் அரைத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது கூட்டமைப்புக் காரர்கள் சொன்னதை அப்படியே கிளிப்பிள்ளை போன்று எழுதி வருகின்றனர்.
 
கூட்டமைப்பு - மோடி சந்திப்பின் பின்னர் வெளியான எந்தவொரு ஆங்கில அறிக்கைகளையும் படித்திராத இவர்கள், தமிழ் மக்களின் தலையில் நன்றாகவே மிளகாய் அரைத்துவருகின்றனர். கூட்டமைப்புக் காரர்கள் வழமை போலவே - நாங்கள் எல்லாவற்றையும் தெளிவாக சொல்லியிருக்கிறோம். அவர்கள் எல்லாவற்றையும் குறித்துக் கொண்டனர். மோடி அவர்கள் மிகவும் உன்னிப்பாக விடயங்களை செவியுற்றார்.
 
அவர்களின் பதிலில் ஓர் உறுதி தெரிந்தது. கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்தப் புராணத்தை வைத்துத்தான் தமிழ் தேசி யவாதிகள் என்போர், தங்கள் அரசியல் குதிரையை ஓட்டிவருகின்றனர். தமிழ் ஊடகங்களின் வக்காலத்து இந்த தேசிய வாதிகள் என்போருக்கு பக்கபலமாக இருப்பதால்தான், அவர்களால் தொடர்ந்தும் நன்றாக மிளகாய் அரைக்க முடிகிறது.
 
உண்மையில் அங்கு என்ன நடந்தது? கூட்டமைப்பு காரர்களும் தமிழ் ஊடகக்காரர்களும் சொல்லுவது போன்று, மோடி அவர்கள் மூக்கில் விரல்வைக்குமளவிற்கு எதையாவது சொல்லி விட்டாரா? சம்பந்தன் தலைமையில் சென்ற கூட்டமைப்பின் உயர்மட்ட குழுவினர் புதுடில்லியில் இரு நாட்கள் தங்கியிருந்தனர். கூட்டமைப்பின் சார்பில், தமிழரசு கட்சியின் தலைவர் சம்பந்தன், மாவை சேனாதிராஜகு, சுமந்திரன் மற்றும் பொன்.செல்வராசா ஆகியோருடன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்குகொண்டிருந்தனர்.
 
கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் பிறிதொரு முக்கியமான கட்சியின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் மேற்படி கூட்டமைப்பின் குழுவில் இடம்பெறவில்லை. ஆனால் இந்திய தூதரக மட்டத்தில் இது தொடர்பில் அதிருப்தி நிலவியதாகவும் தகவலுண்டு. இந்திய பிரதமர் மோடியை முதன்முதலாக சந்திக்க செல்லும் போது அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்துச் சென்றால் நல்லதுதானே என்று, நடப்பாக வினவியதாகவும் தகவலுண்டு. ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடுவதாக சொல்லிக் கொள்ளும் கூட்டமைப்பால் ஆகக் குறைந்தது தங்க ளுக்குள்ளேயே ஒற்றுமையாக பயணிக்க முடியவில்லை என்பதுதான் வேடிக்கை யானது. இது பற்றி தமிழ் ஊடகக்காரர்கள் ஒரு போதுமே வாய் திறந்ததில்லை.
 
மேற்படி சந்திப்பின் போது, இந்திய பிரத மர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் , இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜத்குமார் டோவல் மற்றும் இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜகுதா சிங் ஆகியோரை சந்தித்து கூட்டமைப்பு அளவளவியிருந்தது. ஆனால் இந்த சந்திப்பின் போது புதுடில்லி தரப்பால் கூறப்பட்ட விடயங்கள் எவையும் புதியவை இல்லை.
 
1987 இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட காலத்திலிருந்து, இந்தியா எதனைக் தெரிவித்து வந்ததோ அதனையே தற்போதும் கூறியிருக்கிறது. அதாவது 13வது தீருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அல்லது அதனை ஒரு சட்டகமாகக் கொண்டு, தீர்வொன்றை காணுங்கள். அதற்கு நாங்கள் உங்களுக்கு உதவுவோம். இவ்வளவுதான் மோடியும் சுஸ்மாவும் சொன்ன விடயங்கள். ஆனால் அதற்கு மேல் ஒரு முக்கியமான விடயத் தையும் அவர்கள் கூட்டமைப்பிடம் வலியு றுத்தியிருக்கின்றனர்.
 
அதாவது அரசாங் கத்துடன் ஒர் உணர்வார்ந்த பங்களிப்புடனும் (ளிசைவை ழக சியசவநெசளாகூசி) பரஸ்பரம் ஒருவரிலொருவர் தாங்கிநிற்கக் கூடியதுமான (அரவரயட யஉஉழஅஅழனயவழைஙூ) ஒரு அணுகுமுறையின் மூலம், 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் ஒரு தீர்வை காண்பதற்கு முயற்சிக்க வேண்டும். ஆனால் கூட்டமைப்பின் புதுடில்லி விஜயத்திற்கு விளக்கவுரைகள் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் எந்தவொரு தமிழ் ஆய்வாளரும் இது பற்றி வாய்திறக்கவில்லை. இது பற்றி பேசினால் எங்கு தங்களின் குட்டு வெளிப்பட்டுவிடுமென்றே அனைவரும் மௌனம் காக்கின்றனர். ஆனால் இதே ஊடகக்காரர்களே ஊடக சுதந்திரம் பற்றியும், கருத்துச் சுதந்தரம் பற்றியும் வாய்கிழிய உபதேசம் செய்துவருகின்றனர்.
 
மோடியின் இந்திய கூட்டமைப்பிற்கு மிகவும் தெளிவான செய்தியை வழங்கி விட்டது. அதாவது ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் நீங்கள் பேசுவதற்கான ஓர் உறவை ஏற்படுத்துவது கட்டாயமான ஒன்று. அவ்வாறில்லாது போனால் இந்தியாவால் எதனையும் செய்ய முடியாது போகும். அரசியல் தீர்வு ஒன்றை காண வேண்டுமானால் முதலில் அரசாங்கத்துடன் ஓர் இணக்கப்பாடு அவசியம். அவ்வாறில்லாது போனால் தீர்வுக்கான முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கத்தின் பக்கத்திலிருந்து எதிர்பார்க்க முடியாது. எனவே கூட்டமைப்பு ஒரு தீர்வு நோக்கிச் செல்ல வேண்டுமாயின் முதலில் உள்ளுக்குள் ஒரு சுமூகமான உறவை எற்படுத்த வேண்டும்.
 
ஆனால் இந்த நோக்கில் தமிழ் ஊடகங்கள் எதுவும் குறிப்பிடவில்லை மாறாக, இந்தியா ஏதோ அரசாங்கத்தை எச்சரிக்கை செய்திருக்கிறது என்னும் கோணத்திலேயே தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஆண்டு இலங்கை வருவதற்கான சாத்தியப்பாடுகள் ஆராயப்படுகின்றன.
 
எனவே அத்தகையதொரு சூழலில் இலங்கை அரசாங்கத்துடன் முரண்பட்டு நிற்கும் கூட்டமைப்பிற்கு ஓர் ஆலோசனை வழங்கும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஆனால் இதனை அரைகுறையாக விளங்கிக்கொண்ட தமிழ் ஊடகங்களோ, அரைகுறையாகவே செய்திகளையும் ஆய்வுகளையும் வெளியிட்டு வருகின்றன. இந்தியாவின் ஆலோசனைப்படி கூட்டமைப்பு செயலாற்ற வேண்டுமாயின், முதலில் கூட்டமைப்பு அரசாங்கத்தை தண்டிக்கும் நோக்கில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும்.
 
இலங்கையின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் சர்வதேசத்திற்கு கருத்துச் சொல்வதை நிறுத்த வேண்டும். புலம்பெயர் புலித்தரப்புக்களுடன் கைகோர்த்து இலங்கை இராணுவத்திற்கு எதிராக பேசுவதை நிறுத்த வேண்டும். பிரச்சினைகள் எதுவாக இருப்பினும், அவற்றை உள்ளுக்குள்ளேயே பேசித் தீர்ப்பதற்கான விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும். சர்வதேச வல்லாதிக்க சக்திகள், தங்களின் தேவைகளுக்காக செய்யும் காரியங்களின் பின்னால் இழுபட்டுக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும்.
 
இவற்றை செய்யாது போனால், மோடி இந்தியா எதிர்பார்க்கும் உணர்வார்ந்த பங்களிப்புடனும் (ளிசைவை ழக சியசவநெசளாகூசி), பரஸ்பரம் ஒருவரிலொருவர் தாங்கிநிற்கக் கூடியதான (அரவரயட யஉஉழஅஅழனயவழைஙூ) ஒரு சூழலை, எக்காலத்திலும் கூட்டமைப்பால் ஏற்படுத்த இயலாது. முதலில் கூட்டமைப்பு தமிழ் மக்களை உண்மையாக நேசிக்க வேண்டும். அவ்வாறில்லாது மண்குதிரையில் வைகுண்டம் செல்லலாம் என்பதாக கதைகள் சொல்லிக் கொண்டிருந்தால், ஓர் இணக்கமான தீர்வை காண்பதற்கு முடியாது போகும். இந்த அரசாங்கம் மட்டுமல்ல எந்தவொரு அரசாங்கமும் தன்னை வீழ்த்த நினைப்பவர்களுடன் எவ்வாறு ஒரு இணக்கத்திற்கு செல்லும்?
 
கூட்டமைப்புக்காரர் அரசாங்கத்திற்கு எதிராக செயலாற்றிக் கொண்டிருக்கும் போது, இந்த நாட்டில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கூறிக்கொண்டிருக்கும் போது, எவ்வாறு அரசாங்கம் கூட்டமைப்புடன் பேச முடியும். எனவே இவற்றை கருத்தில் கொண்டுதான் மோடியின் இந்தியா இப்படியானதொரு ஆலோசனையை வழங்கியிருக்கிறது. ஆனால் இந்த விடயங்கள் தமிழ் மக்களை போய்ச் சேர்ந்துவிடால், தமிழ் ஊடகக்காரர்கள் தங்களின் வார்த்தைஜகுலங்களால் வேலி போட்டுவிட்டனர். எல்லாவற்றுக்கும் முன், இந்த தமிழ் ஊடகக்காரர்கள் என்பவர்கள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் மீது அக்கறைகொள்ள வேண்டும்.
உண்மையில் தமிழ் ஊடகக்காரர்கள்தான் பொய்களை சொல்லிவரும் தமிழ் அரசியல் வாதிகளின் காவல்காரர்களாக இருக்கின்றனர். இந்த காவல்காரர்கள் இருக்கும் வரை கூட்டமைப்பின் காட்டில் ஒரே மழைதான்.

No comments:

Post a Comment