Saturday, August 30, 2014

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நடைமுறையில் இல்லாது போனால் நாடு பிளவுபடும்: பிரதமர் டி.எம்.ஜயரட்ண!

Saturday, August 30, 2014
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நடைமுறையில் இல்லாது போனால் நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கட்டுப்படுத்த முடியாமல் போகும் என பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்தார்.
 
நேற்று கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ஜயரட்ண, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்போம் என்பவர்களுக்கு கட்டுக்கட்டாக டொலர்கள் கிடைப்பதாகவும் குறிப்பிட்டார்.சிலர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை கூடாதென்கிறார்கள். ஜனாதிபதி முறையிலன்றி சமூகத்திலேயே தவறு இருக்கின்றது. சமூகத்தின் எதிர்கால நிலைமையைக் கட்டுப்படுத்த தவறுவோமானால் நாடு அழிவுப்பாதைக்கே செல்லும்.
 
ஜனாதிபதி முறை இல்லாது போனால் இவற்றைக் கட்டுப்ப டுத்தவும் முடியாமல் போகும். ஜனாதிபதி முறைமை பற்றி பேசுபவர்கள் தேர்தலில் வாக்குகளை எதிர்பார்த்தே அதனைப் பேசுகின்றனர். இவர்களது அடிவருடிகளாக இருக்கும் சக்திகள் அவர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்த முயற்சிக்கின்றன. ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என்று கூறுபவர்களுக்கு கட்டுக்கட்டாக டொலர்கள் கிடைக்கின்றன.
 
நிறைவேற்று ஜனாதிபதி முறையை தொடர்ந்தும் பலப்படுத்துவதன் மூலம் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணமுடியும். நாடு பிளவுகளு க்கும் பிரச்சினைகளுக்கும் முகங் கொடுக்கும் தறுவாயில் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரம் மூலம் மாத்திரமே நாம் அதனை முறியடிக்க முடியும். அவ்வாறு இல்லையாயின் நாடு மிகவும் ஆபத்தான நிலையை சந்திக்க நேரும்.
 
இன்று சிலர் நிறைவேற்று ஜனாதிபதி முறை தேவையில்லையெனக் கூறுகின்றனர். இவ்வாறு கூறுபவர்கள் நாட்டின் பிரச்சினைகளின் தீர்வுக்குப் பதில் கூறவேண்டும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment