Sunday, August 31, 2014

40 நாட்களாக நடந்த ராமேஸ்வரம் மீனவர் போராட்டம் வாபஸ்!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

Sunday, August 31, 2014
மண்டபம்::கடந்த 40 நாட்களாக நடைபெற்று வந்த ராமேஸ்வரம் மீனவர்களின் தொடர் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு, நாளை முதல் கடலுக்கு செல்வதாக மீனவர் சங்கம் அறிவித்துள்ளது.மீன்பிடி தடைகாலத்திற்கு பிறகு தமிழக கடலோர பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 93 பேரையும், 64 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக்கோரி ஜூலை 24ம் தேதி முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இலங்கை அரசு மீனவர்களை மட்டும் விடுதலை செய்து, விசைப்படகுகளை விடுவிக்கவில்லை. இதனால் மீனவர்கள் மற்றும் மீனவ குடும்பத்தினர் அதிருப்தியடைந்தனர்.

பிடிக்கப்பட்ட 64 விசைப்படகுகளையும் விடுவிக்கக்கோரி தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடும் அவதிக்குள்ளாகினர். கடந்த 29ம் தேதி டெல்லியில் இந்திய  இலங்கை அரசு பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டுக்கூட்டம் நடந்தது. இதில், இலங்கை அரசு பிடித்து வைத்துள்ள விசைப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் படகுகளை விடுவிக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது மீனவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மீனவர்களின் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அனைத்து மீனவ சங்க கூட்டம் காமராஜர் மீனவ சங்கத்தலைவர் நம்புசேகர் தலைமையில் ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடந்த 40 நாட்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று செப்டம்பர் முதல் தேதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்வது என முடிவு செய்யப்பட்டது. கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்கவேண்டும். இந்திய  இலங்கை பிரதிநிதிகள் கொழும்பில் சந்திக்கும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர்கள் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்‘‘ என வேண்டுகோள் விடப்பட்டது.

No comments:

Post a Comment