Tuesday, June 10, 2014

இலங்கை இந்திய உயர் ஸ்தனிகராலையத்தின் முன் ஜெயலலிதாவின் உருவப்பொம்மை எரிப்பு:இலங்கை விவகாரத்தில் தலையிடவேண்டாம்: எச்சரிக்கை!

Tuesday, June 10, 2014
இலங்கை::இலங்கை விவகாரத்தில் தலையிடவேண்டாம் என்று வலியுறுத்தி கொள்ளுப்பிட்டியிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுவினர் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் உருவப்பொம்மையை தீயிட்டு எரித்துள்ளனர்.
தேசிய அமைப்பின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பு-காலி வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment