Saturday, June 28, 2014

புலிகளின் ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகளை தடுக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் திவயின!.

Saturday, June 28, 2014
இலங்கை::புலிகளின் ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகளை தடுக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என திவயின  பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் வாழ்ந்து வரும் புலி ஆதரவாளர்கள் மற்றும் புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
 
பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஒன்றிணைந்த செயலாளர் ரன்கே சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.புலம்பெயர் தமிழர்களின் போலிப் பிரசாரங்களினால் இந்தியாவின் முக்கிய பிரபுக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
புலிகளின் பிரிவினைவாதம் மற்றும் குற்றச் செயல்களை தடுக்க விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.இதன் ஓர் கட்டமாக விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment