Friday, May 30, 2014

Friday, May 30, 2014
இலங்கை::நீண்ட காலமாக பதில் தொழி லாளிகளார்களாக பணியாற்றி வரும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப் படவில்லை எனத் தெரிவித்து யாழ். மாநகர சபை தற்காலிக பதில் தொழிலாளர்கள் அடையாள போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட காலமாக பதில் தொழிலா ளர்களாக பணி செய்த 37 பேருக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
 
குறித்த நியமனப் பட்டியலில் தமது பெயர் இடம் பெறவில்லை என்றும் தாம் எட்டுத் தொடக்கம் பத்து ஆண்டுகள் தொடர்ந்து பணி செய்த போதிலும் தாம் புறக்கணிக்கப் பட்டிருக்கின்றனர் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பதால் தமது குடும்பமும் தாமும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளவேண்டிய சூழல் இருப்பதாகத் தெரிவித்து அவர்கள் யாழ்.மாநகர சபை முன்றிலில் பதாதைகளை ஏந்திய வாறு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

No comments:

Post a Comment