Friday, May 30, 2014

மட்டக்களப்பு வெல்லாவெளி மாணவர்களுக்கான வீதி ஒழுங்கு கருத்தரங்கு!

Friday, May 30, 2014
இலங்கை::வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய மாணவர்களுக்கு வீதிப்போக்குவரத்து தொடர்பான கருத்தரங்கு வெல்லாவெளி வீதிப்போக்குவரத்து பொலிஷாரினால் நடாத்தப்பட்டது.
அண்மைக்காலங்களாக இடம்பெற்றுவரும் அதிக வீதி விபத்துக்களில் இருந்து மாணவர்கள் மறறும் பொதுமக்களை பாதுகாப்பது பற்றிய ஆலோசனை வழங்கும் கருத்தரங்காகவே அமைந்திருந்தது.

மோட்டார் போக்ககுவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஜ.விக்கிரமசிங்க தலைமையில் இக்கருத்தரங்கினை பி.ஜ.செனாரெத்தின பி.சி.ஜெயரெத்தின தயாபரன் ஆகிய பொலிஸ் உத்தியோகத்தர்களால் நடத்த்பட்டது.

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து விதிமுறைகளை எப்படி கடைப்பிடிப்பது பற்றிய இக்கருத்தரங்கானது கலைமகள் வித்தியாலயத்தில் முதல் முறையாக நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment