Sunday, April 13, 2014

நரேந்திர மோடி உள்ளிட்ட இந்தியத் தலைவர்களுடன் பேச்சு: அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல!

Sunday, April 13, 2014
இலங்கை::நரேந்திர மோடி உள்ளிட்ட இந்தியாவின் எல்லா பிரதான தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் இலங்கை அரசாங்கம் தீவிரமான பேச்சுக்களை நடத்தி வருவதாக அரசின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் என்று நம்பப்படும் நரேந்திர மோடியுடன் இலங்கை அரசாங்கம் கலந்துரையாடல்களை நடத்திக் கொண்டிருக்கிறது. இலங்கை விவகாரத்தில் நரேந்திரமோடி வேறுபட்ட அணுகுமுறையை கடைப்பிடிப்பார் என்று கூறப்படுகின்ற நிலையில், இலங்கை அரசாங்கம் அங்கு மாறி வரும் சூழ்நிலைகளை இலங்கை அறிந்தே வைத்துள்ளது.
 
நாம் நரேந்திரமோடியுடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளோம். இந்தியத் தேர்தலின் முன்னேற்றங்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். இந்தியத் தேர்தலில் போட்டியிடும் எல்லா பிரதான கட்சிகளுடனும் நாம் தீவிரமான பேச்சுக்களை நடத்தி வருகிறோம். அவர்கள் எமது அயலவர்கள். அவர்களுடனான பேச்சுக்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment