Tuesday, April 29, 2014

இராணுவ டிரக் விபத்தில் 7 சிப்பாய்கள் காயம்!

Tuesday, April 29, 2014
இலங்கை::தம்புள்ளை, புலகல பகுதியில் இன்று அதிகாலை இராணுவ டிரக் ஒன்று பாதையை விட்டு விலகிச் சென்று கித்துள் மரமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் குறைந்தபட்சம் 07 படைச் சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
மரத்துடன் டிரக் மோதியபோது, மரம் முறிந்து டிரக்கின் மீது விழுந்ததாகவும் பொலிஸார் கூறினர். யாழ்ப்பாணம், சுண்டிக்குளம் இராணுவச் சோதனைச் சாவடியிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த டிரக்கே இவ்வாறு விபத்திற்குள்ளானது. இவ்விபத்தில் காயமடைந்த சிப்பாய்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் கூறினர்.

புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 15 ஆம் மைல்கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயம்!

புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 15 ஆம் மைல்கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில், யாழ்ப்பாணத்திலிருந்து, கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ்சொன்றுடன், லொறியொன்று இன்று அதிகாலை 3 மணியளவில் மோதியுள்ளது.

லொறியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது போனமையால், இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதி, முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பஸ் பயணிகள் மூவரும், நடத்துனரும் விபத்தில் காயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

No comments:

Post a Comment