Friday, April 18, 2014
கோவை::மேற்கு மண்டல மாவட்ட நீதிபதிகள் மாநாடு கோவையில் இன்று நடைபெற்றது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் குத்து விளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார் அப்போது கூறியதாவது:-
கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக பாலியல் தொடர்பான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.
சாந்தன்,பேரறிவாளன்,முருகன் உள்பட 7 பேரின் வழக்கில் விசாரணை முடிந்து விட்டது. வருகிற 25-ந் தேதிக்குள் தீர்ப்பு கூறப்படும். ஊழல், பாலியல் தொடர்பான வழக்குகளை மாவட்ட நீதிபதிகள் 3 அல்லது 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment