Monday, March 31, 2014

இலங்கையில் இருந்து திருச்சிக்கு ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்திய சென்னை ஆசாமிகள்!!

Monday, March 31, 2014திருச்சி::இலங்கையில் இருந்து ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்திய சென்னை ஆசாமிகள், திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டனர்.
 
இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று மாலை திருச்சி வந்தது. விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை வான்நுண்ணறிவு பிரிவு மற்றும் இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். 2 பயணிகளை சோதனை செய்த போது ஸ்கேனரில் இருந்து வித்தியாசமான ஒலி வந்தது. அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்திய போது,
 
ஆசனவாயில் மறைத்து 100 கிராம் அளவுள்ள தலா 2 தங்க கட்டிகள் வீதம் 4 தங்க கட்டிகள் கொண்டு வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 400 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த நசீம் (40), அப்துல்லா (38) என்பது தெரியவந்தது. அதிகாரிகள் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment