Thursday, February 20, 2014
இலங்கை::புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க் கட்சித் தலைவருமான தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதன் நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்தன ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1988ம் ஆண்டில் கொழும்பில் வைத்து புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டவரென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment