Monday, February 24, 2014
இலங்கை::புனர்வாழ்வு பெற்ற முன்னாள் முன்னாள் புலிகளுக்கு கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கான சுயதொழில்
கடனுக்கான திறன்விருத்தி செயலமர்வு பிரதேச ரீதியாக எதிர்வரும் 25, 26,
27 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது .
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால்
நடத்தப்படும் இச் செயலமர்விற்கென அமைச்சின் உயர் அதிகாரிகள் கிளிநொச்சி
மாவட்டத்திற்கு வருகைதரவுள்ளதுடன் சுயதொழிலுக்கு விண்ணப்பங்களை
சமர்ப்பித்தவர்களிலிருந்து ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலிருந்தும் தலா
நூறுபேர் வீதம் இதற்கென தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் .
அத்துடன் இவர்கள் பெயர் விபரங்களை பிரதேச செயலகங்களுடன் தொடர்பு
கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் புனர்வாழ்வு உத்தியோகத்தர் மு .
கயோதரன் அறிவித்துள்ளார் .
இதற்கமைய பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில் எதிர்வரும் 25 ஆம்
திகதி செவ்வாய்க்கிழமையும் கரைச்சி , கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவில் 26
ஆம் திகதி புதன்கிழமையும் மாவட்ட செயலகத்திலும் பூநகரி பிரதேச செயலக
பிரிவைச் சேர்ந்தோருக்கு 27 ஆம் திகதி வியாழக்கிழமையும் இச் செயலமர்வுகள்
நடைபெறவுள்ளன .

No comments:
Post a Comment