Thursday, February 06, 2014
இலங்கை::வலி . வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்
இலங்கை::வலி . வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்
குடியமர்த்தப்படுவர் என்றும் , அதுவரை அவர்கள் ஆர்ப்பாட்டமோ ,
போராட்டமோ செய்ய வேண்டாம் என்றும் யாழ் . மாவட்ட இராணுவத் தளபதி மேஜர்
ஜெனரல் உதயபெரேரா கேட்டுக் கொண்டுள்ளார் .
வலி . வடக்கு மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களின்
தலைவர்களுக்கும் , இராணுவத் தளபதிக்கும் இடையில் நேற்று மாலை பலாலி
இராணுவக் கட்டளைத் தலைமைய கத்தில் சந்திப்பு ஒன்று இடம் பெற்றது .
இந்தச் சந்திப்பிலேயே இராணுவத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார் . அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ,
வலி . வடக்கிலிருந்து இடம் பெயர்ந்தோர் தொடர்பில் சரியான புள்ளி
விவரங்கள் இல்லை . நீங்கள் ஒரு புள்ளி விவரங்களைக் கொண்டு வருகின்றீர்கள் .
பிரதேச செயலகம் வேறொரு புள்ளி விவரம் தருகின்றது .
மீள்குடி யேற்ற அமைச்சு இன்னொரு புள்ளி விவரத்தைத் தருகின்றது . எனவே
வலி . வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் சரியான புள்ளி விவரங்களை முதலில்
திரட்டுங்கள் .
வலி . வடக்கிலிருந்து இடம் பெயர்ந்தோரின் எண்ணிக்கையை வேறாகவும் ,
அவர்களின் வம்சம் பெருகியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கையை வேறாகவும்
தயாரியுங்கள் .
முகாமில் உள்ளவர்கள் , உறவினர் , நண்பர்கள் வீடுகளிலுள்ளவர்கள் ,
யாழ்ப்பாணத்துக்கு வெளியே உள்ளவர்கள் என்று தனித்தனியான விவரங்களைத்
தயாரியுங்கள் .
மீள்குடியமர்வுக்கு விருப்பமானவர்களின் பெயர் விவரங்களைத் தனியாகவும்
திரட்டுங்கள் . இந்தத் தகவலை எவ்வளவு விரைவாகத் திரட்டித் தருகின்றீர்களோ ,
அவ்வளவு விரைவாக உங்களை , உங்கள் சொந்த இடங்களிலேயே மீளக் குடியமர்த்த
முடியும் .
பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்புக்குச் சுவீகரிக்கப்பட்ட பகுதி
தவிர்ந்த ஏனைய பகுதிகளை விடுவிக்க முடியும் . பலாலிப் பகுதியில்
பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கான மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் .
முகாமிலுள்ளவர்கள் முதலிலும் பின்னர் உறவினர் , நண்பர்கள்
வீடுகளிலுள்ள வர்களும் அதன் பின்னர் யாழ் . மாவட்டத்துக்கு வெளியே
உள்ளவர்களும் கட்டம் கட்டமாக மீளக்குடியமர்த்தப்படுவர் .
அவர்களின் சொந்த இடங்க ளிலேயே அவர்கள் மீளக் குடியமரமுடியும் .
அதுவரை நீங்கள் ஆர்ப்பாட்டமோ , போராட்டமோ செய்ய வேண்டாம் . உங்கள்
மீள்குடியமர்வு நடவடிக்கையைத் துரிதப்படுத்து வதற்காக ஒரு இராணுவ அதிகாரியை
நியமித்துள்ளேன் .
அவருடன் கலந்துரையாடி நீங்கள் உங்கள் வேலையை முன்னெடுக்க முடியும் .
நீங் கள் சரியான தகவல்களை எவ்வளவு விரைவாகச் சமர்ப் பிக்கின்றீர்களோ
அந்தளவு விரைவாக மீள்குடியமர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று
இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார் .

No comments:
Post a Comment