Sunday, February 16, 2014

இலங்­கைக்கு எதி­ராக இந்­தியா வாக்­க­ளிக்கத் தீர்­மா­னித்தால் அது பாரிய பாத­க­மாக இருக்கும்: ராஜித்த சேனா­ரட்ன!

News Service 
Sunday, February 16, 2014
இலங்கை::வடக்குத் தமிழ் தரப்பும் அர­சாங்­கமும் பேச்­சு­வார் த்­தை­களை ஆரம்­பித்து அர­சியல் தீர்வு மற்றும் அதி­காரப் பகிர்வு குறித்த விட­யங்­களில் விரை­வாக அவ­தானம் செலுத்­து­வதே தற்­போது மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய விட­ய­மா­க­வுள்­ளது. எனவே எதிர்­வரும் ஆறு வாரங்­க­ளுக்குள் அர­சாங்கத் தரப்பும் தமிழ்த் தரப்பும் விரை­வாக கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்­ள­வேண்டும் என்று மீன்­பிடி மற்றும் நீரி­யல்­வள அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனா­ரட்ன தெரி­வித்தார்.

இவ்­வாறு அர­சியல் தீர்வு மற்றும் அதி­காரப் பகிர்வு தொடர்­பாக இணக்­கப்­பாட்­டுக்கு சென்றால் மட்­டுமே இந்­தி­யாவின் ஆத­ரவை நாம் பெற முடியும். அத்­துடன் ஐக்­கிய நாடுகள் சபையும் அழுத்­தங்­களை கைவிடும். எந்த விதத்தில் பேசு­வது என்று சிந்­திக்­காமல் பேச்சை ஆரம்­பிக்­க­வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.
ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் இலங்­கைக்கு எதி­ராக இந்­தியா வாக்­க­ளிக்கத் தீர்­மா­னித்தால் அது இலங்­கைக்கு பாரிய பாத­க­மாக இருக்கும். பல்­வேறு நாடு­களின் தீர்­மானம் இந்­தி­யாவின் தீர்­மா­னத்தில் தங்­கி­யி­ருக்கும் என்றும் அவர் கூறினார். எதிர்­வரும் ஜெனிவா மனித உரிமைக் கூட்டத் தொடர் அமர்­வுகள் மற்றும் இலங்கை தொடர்பில் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ள­தாக கூறப்­படும் பிரே­ரணை குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அமைச்சர் இந்த விட­யங்­களை கூறினார்.
மீன்­பிடி மற்றும் நீரி­யல்­வள அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனா­ரட்ன இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில் ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் இந்­தி­யாவின் ஆத­ரவை எம்மால் பெற முடி­யுமா என்ற கேள்வி எழுந்­துள்­ளது. காரணம் இந்­தி­யா­வினால் இலங்­கைக்கு உதவி செய்ய முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
ஆனால் இந்­தியா இலங்­கைக்கு எதி­ராக வாக்­க­ளிப்­ப­தற்கு தீர்­மானம் எடுக்­கு­மாயின் அது எமக்கு பாத­க­மான நிலை­மையை உரு­வாக்கும். காரணம் பல்­வேறு நாடு­களின் தீர்­மானம் இந்­தி­யாவின் தீர்­மா­னத்தில் தங்­கியி­ருக்­கின்­றது என்று கூறலாம். இதே­வேளை இந்­தி­யாவின் ஆத­ரவை பெற­வேண்­டு­மானால் அர­சாங்­கமும் வடக்குத் தமிழ் மக்­களும் கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­பட்டு ஒரு இணக்­கப்­பாட்­டுக்கு வர­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். குறிப்­பாக அர­சியல் தீர்வு மற்றும் அதி­காரப் பகிர்வு போன்ற விட­யங்கள் தொடர்பில் அர­சாங்­கமும் வடக்குத் தரப்பும் பிர­வேசம் ஒன்­றுக்கு வர­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.
வடக்குத் தமிழ் தரப்பும் அர­சாங்­கமும் பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பித்து அர­சியல் தீர்வு மற்றும் அதி­காரப் பகிர்வு குறித்த விட­யங்­களில் விரை­வாக அவ­தானம் செலுத்­து­வதே தற்­போது மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய விட­ய­மா­க­வுள்­ளது. இதனை முதலில் ஆரம்­பிக்­க­வேண்டும். எதிர்­வரும் ஆறு வாரங்­க­ளுக்குள் அர­சா ங்கத் தரப்பும் தமிழ்த் தரப்பும் விரை­வாக கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்­ள­வேண்டும் . காரணம் ஆறு வாரங்­க­ளுக்குள் வடக்குத் தரப்பும் அர­சாங்­கமும் இணைந்து பேச்­சுக்­களை நடத்தி ஒரு பிர­வேசம் ஒன்­றுக்கு வர­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.
காரணம் மூன்­றா­வது முறை­யா­கவும் ஜெனி­வாவில் இலங்கை தொடர்பில் பிரே­ர­ணையை நிறை­வேற்ற விடாமல் அதனை எவ்­வா­றா­வது தடுப்­பது அவசியமாகும் என்றார்.
 
 

No comments:

Post a Comment