Wednesday, February 05, 2014
இலங்கை::வடமாகாணம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்படும் நந்தாராம தமிழ் பௌத்த அறநெறிப்பாடசாலையில் இலங்கையின் 66 சுதந்திர தின வைபவம் நேற்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
நந்தாறாம் தமிழ் பௌத்த சங்கத் அறநெறிப் பாடசாலையின் செயலாளர் சு.கிருசானந் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றியதை தொடர்து நடைபெற்றது.
இன்றைய நிகழ்வில் கருத்துரை வழங்கிய கிருசானந் தமிழர் மற்றும் பௌத்த ஆகிய இரண்டு வேறு இல்லை ஆனால் இரண்டும் மொழிகளால் தான் வேறுபடுகிறது எனவே நாம் அந்த வேறுபாட்டை அடியோடு அகற்ற வேண்டும் ஆனால் தமிழர் சிங்களத்தையும் சிங்களவர் தமிழையும் படிப்பார்கள் என்றால் எமக்குள் எந்த வேற்றுமையும் ஏற்படாது என தெரிவித்தார்.“
இன்று எமது பாடசாலையில் நடைபெற்ற 66 ஆது சுதந்திரதின விழாவில் சுதந்திர இலங்கையின் தற்போதைய நிலைமை பற்றியும் நாம் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத்தில் எமது செயற்பாடுகள் மற்றும் விரிவாக்கல் திட்டம் தொடர்பாக செயலாளர் உரையாற்றினார்.
இன்றைய நிகழ்வில் நிர்வாக உத்தியோகத்தர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்னர்.




No comments:
Post a Comment