Thursday, January 23, 2014
இலங்கை::இலங்கை ஏனைய நாடுகளைப்போல் சமமாக ஜெனீவாவில் நடத்தப்படவில்லை. அத்துடன் இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை::இலங்கை ஏனைய நாடுகளைப்போல் சமமாக ஜெனீவாவில் நடத்தப்படவில்லை. அத்துடன் இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணை நிலைமையை மோசமாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போருக்கு பின்னர் இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளை கவனிக்காமலேயே சர்வதேச நாடுகள் செயற்படுகின்றன.
இதேவேளை, நாட்டில் சமாதான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின்
சில நிறுவனங்கள், இலங்கையில் தமது வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளன
என்றும் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment