Friday, January 3, 2014

புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மாவட்ட இளைஞர் அமைப்பினால் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

Friday, January 03, 2014
இலங்கை::புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மாவட்ட இளைஞர் அமைப்பினால் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு ஊறணி கலாச்சார மண்டபத்தில்நேற்று வியாழக்கிழமை   இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மாவட்ட இளைஞர் அமைப்பின் தலைவர் க.சுஜான் தலைமையில் இடம்பெற்றது.

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மண்முனை வடக்கு இளைஞர்சேவை மன்ற உத்தியோகத்தர் ந.குகேந்திரா மற்றும் சுதந்திரக்கட்சி மாவட்ட இளைஞர் அமைப்பின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment