Thursday, January 30, 2014

ஜேர்மன் வாழ் தமிழர்- தாய்மொழியைக் கற்பதில் மிகுந்த ஆர்வம்; நயந்து பாராட்டுகிறார் தூதுவர்!

Perera2
Perera1
Perera4
Perera3
Perera5
Perera6
Thursday, January 30, 2014
இலங்கை::ஜேர்மனியில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்கள் தமிழ் மொழியை கற்கின்றமைக்கு உயரிய முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர் என்று ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவர் உபாலி சரத் கொங்கஹகே மனம் திறந்து பாராட்டி உள்ளார்.
2002 ஆம் ஆண்டுக்கான அரச இலக்கிய விழாவில் சிறுவர் இலக்கியத்துக்கான விருது{ ஆங்கில மொழி மூலம் } பேர்லினில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற எழுத்தாளர் நெவில் பெரேரா எழுதிய Kitty and the Bell Necklace என்கிற நூலுக்கு கிடைக்கப் பெற்று உள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கடந்த வாரம் விருது வழங்கல் விழா இடம்பெற்றது. சுகவீனம் காரணமாக நெவில் பெரேராவால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் இவருக்கான விருதை கையளிக்கின்ற பொறுப்பு தூதரகத்திடம் கையளிக்கப்பட்டது. தூதரகமும், இலங்கைச் சமூகமும் இணைந்து விருது வழங்குகின்ற விழாவை நடத்தின.
இவ்விழாவில் நெவில் பெரேராவின் எழுத்தாற்றலையும், சிறுவர் நூலையும் நயந்து தூதுவர் பேசினார்.
அப்போதே தமிழர்களின் தாய்மொழிப் பற்றை வெகுவாக தூதுவர் நயந்தார்.
இப்பேச்சில் சம்பந்தப்பட்ட பகுதி வருமாறு:-
இலங்கைச் சமூகத்தினர் தாய்மொழியை கற்கின்றமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சிங்களவர்கள் சிங்களத்தையும், தமிழர்கள் தமிழையும் முக்கியப்படுத்தி கற்க வேண்டும்.
ஜேர்மனில் உள்ள தமிழர்கள் தமிழ் மொழியை கற்கின்றமைக்கு உயரிய முக்கியத்துவம் கொடுத்து வருகின்மையை நான் அவதானித்து உள்ளேன். இது மனம் திறந்து பாராட்டப்பட வேண்டிய விடயம் ஆகும். இவர்களின் முயற்சிகளுக்கு தூதரகமும் உதவி செய்து வருகின்றது. கல்வி அமைச்சில் இருந்து தேவையான புத்தகங்களை பெற்று, இவர்களுக்கு விநியோகிக்கின்றது. ”

No comments:

Post a Comment