Monday, January 20, 2014

சட்­ட­வி­ரோ­த­மாக இலங்­கையில் தங்­கி­யி­ருந்த நான்கு இந்தியர்கள் பளையில் கைது!

sss2032Monday,January, 20, 2014
இலங்கை::சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 4 இந்தியபிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
 
இவர்கள் வடக்கு மாகாணத்தின் பளைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடு தலின் போது கைது செய்யப்பட்டுள்ள னர் . கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகள் சுற்றுலா விசா அனுமதியில் வந்து இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக பொலி ஸார் தெரிவித்தனர் ..
 
மாளிகாவத்தை சங்கராஜ சுற்றுவட்டத்திற்கு அருகில் ஒரு தொகை வல்லப்பட்டையுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது!

மேல் மாகாண புலனாய்வு பிரிவினர் நேற்று மாலை மேற்கொண்ட சோதனையில் குறித்த இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இந்தியர் கொலன்னாவ, வெல்லம்பிட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இவரிடம் இருந்து 3 கிலோ 900 கிராம் வல்லப்பட்ட மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் இன்று  மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.


 



No comments:

Post a Comment