Thursday, January 16, 2014
இலங்கை::வடக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மாகாண நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ் சோமசுந்தர அவனியு வீதியில் இன்று புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட உள்ளுராட்சி அமைச்சின் அலுவலகத்தில் முதலமைச்சர் தனது பணிகளை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன் போது மாகாண அமைச்சர்களின் செயலாளர்கள் மற்றும் மாகாண சபையின் பிரதம செயலாளர் மற்றும்ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் அரச உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மாகாணத்தின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் மாகாண நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.






No comments:
Post a Comment