Sunday, December 8, 2013

யாழ். மருதனார்மடம் - கைதடி வீதியிலுள்ள தோட்டக்காணி ஒன்றிலிருந்து குண்டு மீட்பு!

Sunday, December 08, 2013
இலங்கை::யாழ். மருதனார்மடம் - கைதடி வீதியிலுள்ள தோட்டக்காணி ஒன்றிலிருந்து குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உரப்பையில்  இடப்பட்டிருந்த  நிலையில் இந்தக் குண்டு  இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த  தோட்டக்காணியின் உரிமையாளர்  சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து இந்தக் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

No comments:

Post a Comment