Wednesday, December 11, 2013

நெடுந்தீவுப்பகுதியில் இன்று காலை மீனவர் சடலமாக மீட்ப்பு – மற்றும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என சடலமாக ஒப்படைப்பு!

Wednesday, December 11, 2013
இலங்கை::நெடுந்தீவுப்பகுதியில் இன்று காலை தொழிலுக்கென புறப்பட்டுச் சென்றிருந்த மீனவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு ஆறாம் வட்டாரத்தினை சேர்ந்த 42 வயதுடைய வ.ஜீவராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது சடலம் கடற்கiயிலுள்ள வாடி வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
 
சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகலொன்றினை அடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையினில் ஒப்படைத்துள்ளனர்.

இதனிடையே அதே இடத்தினை சேர்ந்த 56  வயதுடைய  எஸ்.ஜேசுதாசன் என்பவரது சடலமும் மீடகப்பட்டு வைத்தியசாலையினில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் தற்கொலை செய்து கொண்டதாகவே தெரிவித்து அவரது சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
 

No comments:

Post a Comment