Tuesday, December 31, 2013

புலிகளின் ஆதரவு கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் யாழ் நல்லூரில்!

Tuesday, December 31, 2013
இலங்கை::கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிட்சபேசன்
சுற்றுலா விசாவில் வந்துள்ள இவர் எதிர்வரும் 2 ஆம் திகதிவரை தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது .
 
தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள இவர் நேற்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் . சிறிதரன் மற்றும் வட மாகண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார் .
 
மீள்குடியர்ந்த மக்களுடனும் கலந்துரையாடியுள்ளார் .அத்துடன் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு செயற்படும் பல அமைப்புக்களையும் சந்தித்து அவர் பேச்சு நடத்தியுள்ளார் .
 
இதேவேளை யாழிலுள்ள சபாபதிப்பிள்ளை அகதி முகாமிற்கும் இவர் விஜயம் மேற்கொண்டுள்ளார் . இந்த முகாமிற்கு ஏற்கனவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது .
 
மனித உரிமை பிரச்சினைகள் உட்பட வடக்கின் நிலைமைகள் குறித்து கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனிடம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
 
இலங்கையில் பிறந்த ராதிகா கனடாவின் ஸ்கார்பரே ரூஜ் ரிவர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராவார்.
 
வடக்கில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்த அவர் அங்குள்ள தற்போதைய நிலைமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் வடக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பாகவும் விளக்கப்பட்டது.
 
வடக்கில் அவர் திரட்டிய தகவல்கள் தொடர்பில் கனடா திரும்பிய பின்னர்

கனடிய  நாடாளுமன்றத்தில் வழங்குவார் என  தெரிவித்தார் (புலிகளின் ஆதரவு) கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன்.

No comments:

Post a Comment