Tuesday, December 3, 2013

இந்­தியப் பிர­தமர் மன்­மோ­கன்சிங் விக்கி­னேஸ்­வ­ரனின் அழைப்­பை­யேற்று இலங்கை வரு­வா­ரானால் எதிர்ப்பு:ஜோன் அம­ர­துங்க!

Tuesday, December 03, 2013
இலங்கை::பொது­ந­ல­வாய மாநாட்டை பகிஷ்­க­ரித்த இந்­தியப் பிர­தமர் மன்­மோ­கன்சிங் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வ­ரனின் அழைப்­பை­யேற்று இலங்கை வரு­வா­ரா னால் அதனை கடு­மை­யாக எதிர்ப்­ப­தாக ஜோன் அம­ர­துங்க, தெரி­வித்தார்.
 
நாட்டை நேசிக்கும் எதிர்க்­கட்­சி­யான நாம் இதனை எதிர்ப்­ப­தோடு ஒரு நாட்டுத் தலை­வ­னுக்கு இங்கு வரு­மாறு அழைப்பு விடுக்கும் அதி­காரம் ஜனா­தி­ப­திக்கு உள்­ள­தென்றும் அவர் தெரி­வித்தார்.
 
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற வரவு- செல­வுத்­திட்ட குழு நிலை விவா­தத்தை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­றும்­போதே ஜோன் அம­ர­துங்க எம்.பி. இதனைத் தெரி­வித்தார்.
 
சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்:-
 
வட மாகாண சபை முத­ல­மைச்சர் சி.வி. விக்­கினேஸ்­வ­ரனின் அழைப்பின் பேரில் இந்­திய பிர­தமர் மன்­மோ­கன்சிங் மற்றும் பிர­தி­நி­திகள் யாழ்ப்­பாணம் விஜயம் மேற்­கொள்­வதை பிர­தான எதிர்க்­கட்­சி­யென்ற ரீதியில் கடு­மை­யாக எதிர்க்­கின்றோம். பொது­ந­ல­வாய மாநாட்­டுக்கு கலந்­து­கொள்­ளாத மன்­மோ­கன்சிங் ஒரு முத­ல­மைச்சர் ஒரு­வரின் அழைப்பின் பேரில் இங்கு வர முடி­யாது. ஒரு நாட்டின் தலைவர் இலங்கை வர­வேண்­டு­மென்றால் எமது நாட்டு ஜனா­தி­ப­தியே அழைப்பு விடுக்க வேண்டும்.
 
அதை­வி­டுத்து முத­ல­மைச்சர் ஒரு­வ­ருக்கு இந்­திய பிர­த­ம­ருக்கு அழைப்பு விடுக்க முடி­யாது. இதனை பிர­தான எதிர்க்­கட்­சி­யென்ற ரீதி­யிலும் நாட்டை நேசிக்கும் கட்­சி­யென்ற ரீதி­யிலும் கடு­மை­யாக எதிர்க்­கின்றோம்.
 
பொது­ந­ல­வாய மாநாட்டை இலங்­கையில் நடத்­தி­யதால் எமக்கு கிடைத்த பலன் என்ன ?
பிரிட்டிஷ் பிர­தமர் கமரூன் இங்கு வந்தார். இறு­தியில் என்ன நடந்­தது? அவர் இலங்­கைக்கு எதி­ரான கருத்­து­களை வெளி­யிட்டு வெளி­யே­றினார்.
 
உலகின் விசா­ல­மான நாடு­க­ளான இந்­தி­யாவில் 32 அமைச்­சர்­களே உள்­ளனர்.
 
சீனாவில் அமைச்­சர்­களின் தொகை 27 ஆகும். ஆனால், இங்கு சிறிய நாட்டில் அமைச்­சர்கள் தொகை 65 க்கும் மேலாக உள்­ளது.

No comments:

Post a Comment